அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

Share it if you like it

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 3,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவருக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டதாக கூறி, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க, நீதிபதி அல்லி முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.


Share it if you like it