கத்தார் தலைநகர் தோஹாவில் சாலை விதிகளை மீறி விலையுயர்ந்த பைக்கில் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் சாஹசம் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இளைஞரை கைது செய்து, பைக்கில் கைப்பற்றி அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்து பொடியாக்கி காவல்துறையின் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கத்தார் காவல்துறை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இளைஞர்களுக்கு இதுபோன்று தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் வரும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
https://x.com/gopinathvijay91/status/1736274000744157434?s=20