ஹிந்து பெண்ணை ஒரே இரவில் மதம் மாற்றி தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் பள்ளியில் வேலை வாங்கி தந்த  பிஷப்..!

ஹிந்து பெண்ணை ஒரே இரவில் மதம் மாற்றி தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் பள்ளியில் வேலை வாங்கி தந்த பிஷப்..!

Share it if you like it

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக “இந்து பெண்ணை” ஒரே இரவில் கிறிஸ்டியனாக மாற்றிய பிஷப் தேவாலயத்தில் நடக்கும் குளறுபடிகள்..

Tamil Evangelical Lutheran தேவாலயத்தைச் சேர்ந்த தேவாலய உறுப்பினர்கள், தங்கள் பிஷப் ஒரு இந்துப் பெண்ணை ஒரே இரவில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி, தேவாலயத்தால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக நியமிக்க 34 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் அளித்துள்ள சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

இந்த தேவாலயம் 200 – க்கும் மேற்பட்ட பள்ளிகள், 40 அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஒரு கலைக் கல்லூரி ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் நடத்தி கொண்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் 13 வது பிஷப் டேனியல் ஜெயராஜ், மார்ச் 5, 2020 அன்று தனது பதவிக் காலம் முடிவடைந்த பின்பும் தனது பதவியில் நீடித்து வருவதாக அவர் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

ஆனால் அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், இந்த பிஷப் இப்போது தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணிகளை வாங்கி தருவதாக பகீர் குற்றச்சாட்டு அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஹேமாவதி என்னும் இந்துப் பெண் ஒருவரை பிஷப் ஒரே இரவில் மதம் மாற்றி விட்டு, அவரிடமிருந்து 34 லட்சம் லஞ்சமாகப் பெற்று தஞ்சையில் உள்ள கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியை வாங்கி தந்து உள்ளார்.

நன்றி ; கதிர் நீயூஸ்


Share it if you like it