தி.மு.க.வை விட மாட்டோம்… மண்டிபோட வைப்போம்… பா.ஜ.க. நிர்வாகி ஆவேசம்!

தி.மு.க.வை விட மாட்டோம்… மண்டிபோட வைப்போம்… பா.ஜ.க. நிர்வாகி ஆவேசம்!

Share it if you like it

ஊழல் செய்தவர்களை விட மாட்டோம். தி.மு.க.வில் முதல் குடும்பம் முதல் கடைசி குடும்பம் வரை ஜெயிலுக்கு போவார்கள். தி.மு.க.வை மண்டிபோட வைப்போம் என்று பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க.வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. இவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுதான் சரியான உதாரணம். மக்கள் பணத்தை திருடித் தின்றால் இதுதான் கதி. யார் காலில் விழுந்தாலும் விடமாட்டோம். மோடி காலில் விழுந்தால் ஆசீர்வாதம் செய்வார். ஊழல்வாதிகளை விடமாட்டார். தி.மு.க.வை மண்டிபோட வைப்போம்.

தி.மு.க.வில் முதல் குடும்பம் முதல் கடைசி குடும்பம் வரை அனைவரும் ஜெயிலுக்குப் போவார்கள். காமன்வெல்த் போட்டிக்கு 6 லட்சம் ரூபாய்க்கு ஏ.சி. வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? ஊழல்வாதிகளுக்கு மரியாதை என்பதே கிடையாது, கொடுக்கவும் மாட்டோம். இப்படிச் செய்தால்தான் இனி ஊழல் செய்ய மாட்டார்கள்” என்று விளாசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it