பா.ஜ.க. இல்லாமல் அரசியல் கிடையாது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர், சுஷ்மா ஸ்வராஜ் நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் பேசும் போது இவ்வாறு கூறினார் : பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் முடிவுகள், அரசியல் நிகழ்வுகள் நடக்காது. பொறுப்பையும், பொறுமையையும் சரியான விகிதத்தில் கலந்து, நாம் அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கூறினார்.