மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகளை கீழ் கண்ட தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாண்டஸ் புயல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை புரட்டி எடுத்துள்ளது. இதன்காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உதவி செய்ய தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு ; 9150021831, 9150021832, 9150021833