அண்ணாமலையை பார்த்து கதறிய நீர்வளத்துறை அமைச்சர்!

அண்ணாமலையை பார்த்து கதறிய நீர்வளத்துறை அமைச்சர்!

Share it if you like it

பா.ஜ.க.வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர் துரைமுருகன் கதறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், அந்த பொறுப்பிற்கு வந்த பின்பு அக்கட்சியின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, தி.மு.க. தலைமை கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இதுதவிர, கழகத்தின் ஆசி பெற்ற பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் மற்றும் யூ டியூப்பர்ஸ் என அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும், நாளுக்கு நாள் பா.ஜ.க.வின் வளர்ச்சி உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், மூத்த பத்திரிக்கையாளர் மணி அண்ணாமலையை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவர் தெளிவான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். மற்ற பா.ஜ.க தலைவர்களை விட இவர் தீவிரமாக செயல்படுகிறார் என்று கதறியதே சிறந்த உதாரணம். அதேபோல, சீப்பு செந்தில் உள்ளிட்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் காலை முதல் மாலை வரை அண்ணாமலையின் பெயரை மந்திரம் போல ஜெபித்து வருகின்றனர்.

இதனிடையே, பா.ஜ.க.வின் வளர்ச்சி, அண்ணாமலையின் எழுச்சி, தி.மு.க.விற்கு பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பா.ஜ.க. குறித்து இவ்வாறு அலறியிருக்கிறார் ;

நம்முடைய எதிரி நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவன் அது அ.தி.மு.க. அவனை சந்தித்தோம். பா.ஜ.க. இங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களிடம், பண பலம், அதிகார பலம் உள்ளது. அவர்களுக்கு, இணையாக நாம் சண்டை செய்ய வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் நம் பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். இந்த கமிட்டியை ஜாக்கிரதையாக கொண்டு வர வேண்டும் என அண்ணாமலையை மனதில் நினைத்து தி.மு.க.வின் மூத்த அமைச்சர் கதறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it