எதிர்க்கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை: மூத்த பத்திரிக்கையாளர் மணி கதறல்!

எதிர்க்கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை: மூத்த பத்திரிக்கையாளர் மணி கதறல்!

Share it if you like it

வருங்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே அண்ணாமலையை எதிர் கொள்ள முடியும் என மூத்த பத்திரிக்கையாளர் மணி அலறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பா.ஜ.க.வின் ராக்கெட் வேக முன்னேற்றத்தை கண்டு பல கட்சிகள் தற்பொழுது மிரண்டு போய் உள்ளன. இதே கருத்தை பல அரசியல் நோக்கர்களும் கூறிவருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க மூன்றவாது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது. இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல பா.ஜ.க மூத்த தலைவர்கள் அண்ணாமலையை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் மூத்த பத்திரிக்கையாளர் மணி லிபர்டி இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டியது என்பது அண்ணாமலை வந்த பிறகு கஷ்டமானதாக மாறிவிட்டது இதுதான் உண்மை. அவர் புது புதுசா செய்கிறார். அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன் அரசியலில் அவர் ஆபத்தான மனிதர். அதற்கு, முன்னாள் இருந்த பா.ஜ.க தலைவர்களோடு நான் பழகி இருக்கிறேன். இல.கணேசனை பார்த்து இருக்கிறேன், பொன்னாரை பார்த்து இருக்கிறேன், சி.பி.ராதாகிருஷ்ணன் பார்த்து இருக்கிறேன், தமிழிசை செளந்தரராஜனை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் இல்லாத ஒன்று கட்சியை வளர்க்க எந்த எல்லைக்கும் செல்லும் சக்தி மிக்க மனிதராக அண்ணாமலை இருக்கிறார். வருங்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே அண்ணாமலையை எதிர் கொள்ள முடியும் என பத்திரிக்கையாளர் மணி கதறியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it