ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டு தி.மு.க.வினர் முகத்தில் கரியை பூசிய அண்ணாமலை!

ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டு தி.மு.க.வினர் முகத்தில் கரியை பூசிய அண்ணாமலை!

Share it if you like it

ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான பில்லை, ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதாகக் கூறிய அண்ணாமலை, அதன்படி இன்று காலை வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிட்டார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கர்நாடாக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். இவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக அரசின் பல்வேறு துறைகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரம் மற்றும் டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்பாலாஜி, அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் வெளிநாட்டு தயாரிப்பு. அதன் விலை 10 லட்சம் ரூபாய் என்றும், இது எப்படி அவருக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, அந்த வாட்ச் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என விளக்கம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இதன் பிறகு, வாட்ச் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும், தி.மு.க.வின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக்கால ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ரஃபேல் வாட்ச் பில்லை அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவல் பணியில் இருந்தபோது லஞ்சப் பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக தி.மு.க.வினர் தகவல் பரப்பினர். நான் இந்த வாட்ச்சை சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். 2021-ல் இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.


Share it if you like it