தி.மு.க தர்மபுரி எம்பி-யின் தீவிர ஆதரவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் புகார் தெரிவித்த பா.ஜ.க…!

தி.மு.க தர்மபுரி எம்பி-யின் தீவிர ஆதரவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் புகார் தெரிவித்த பா.ஜ.க…!

Share it if you like it

தமிழக பா.ஜ.க-வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் மற்றும் நடிகையுமான காயத்திரி ரகுராம் அவர்களை தர்மபுரி தி.மு.க எம்.பி -யின் தீவிர ஆதரவாளர் ஜெயசந்திரன் என்பவன் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் அண்மையில் விமர்சனம் செய்து இருந்தான். அவன் மீது மிக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்திரி அவர்கள் காவல்துறையில் புகார் செய்து இருந்தார்.

தமிழகத்தில் நடப்பது விடியல் ஆட்சி என்பதாலும், பாதிக்கப்பட்டவர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால், திமு.க அரசு தனது கட்சியை சேர்ந்த ஆபாச பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் தி.மு.க ஆபாச பேச்சாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காயத்திரி ரகுராம், எஸ்ஜி சூர்யா மற்றும் மாநில செயலாளர் ஆகியோர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் படி இன்று தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it