தமிழக மீனவர்களின் மீன் படகுகளை மீட்டு கொடுக்கும் படி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா உடன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன் பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய இணையமைச்சருமானஎன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, இந்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.