பா.ஜ.க.வை சீண்டினால் தாங்க மாட்டிங்க: தி.மு.க.விற்கு மணி கடும் எச்சரிக்கை!

பா.ஜ.க.வை சீண்டினால் தாங்க மாட்டிங்க: தி.மு.க.விற்கு மணி கடும் எச்சரிக்கை!

Share it if you like it

தி.மு.க.வின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலுக்கு மூத்த பத்திரிக்கையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிக்கை உலகில் நன்கு அறிமுகமானவர் மற்றும் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று அழைக்கப்படுபவர் மணி. பல ஊடகங்களில் இவரது நேர்காணல்கள், பேட்டிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். குறிப்பாக, இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராக மட்டுமே இருக்கும். சில நேரங்களில் மோடி அரசு செய்யும் நன்மைகள் குறித்தும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அசுர வளர்ச்சி குறித்தும் இவர் பேசியது உண்டு. அந்தவகையில், ஜீவா டுடே இணையதள ஊடகத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது;

ஜெயலலிதா தற்பொழுது இல்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த 5 வருடத்தில் என்ன ஆகும் என்பது தெரியாது. தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஒரு வருடத்தை நெருங்க போகிறது. அக்கட்சி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தி.மு.க.வின் மீது வெறுப்பு ஏற்படும் நபர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பர். சரியான தலைமை இல்லாத அ.தி.மு.க செயலிழந்து போய் விட்டால், அவர்களின் வாக்கு பி.ஜே.பி.யை நோக்கி தான் நகரும். அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சி கட்டிலுக்கு வர 30% சதவீத வாக்குகளை பெற வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வெறும் 12% சதவீதத்தை தாண்டினால் போதும் என்று அலறி இருந்தார்.

இதனிடையே, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.,வின் மகன் சூர்யா, அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கம் இருப்பதால் அக்கட்சியில் இருந்து தான் விலகியதாக அண்மையில் ஆதன் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், தி.மு.க.வின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில். எங்கள் தலைமை உத்தரவிட்டால் பா.ஜ.க.வில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை தூக்குவோம். இரண்டு பேர் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அந்தவகையில், தர்மபுரி எம்பி செந்திலின் பேச்சிற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த பத்திரிக்கையாளர் மணி தி.மு.க.விற்கே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it