‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே… ஸ்டாலினை கலாய்த்த பா.ஜ.க. மூத்த தலைவர்!

‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே… ஸ்டாலினை கலாய்த்த பா.ஜ.க. மூத்த தலைவர்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தமிழக முதல்வரின் கருத்திற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ : “தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. பா.ஜ.க.வில் கடைநிலை தொண்டன் கூட நாட்டின் பிரதமராக வர முடியும் என்பதை தான் அமித்ஷா கூறினார் என்பது கூட தெரியாமல் ஊடக வதந்திகளை நம்பி ‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே. உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரேனும் திமுக தலைவராகவோ, ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ முடியுமா? அமித்ஷா சொன்னதின் அர்த்தம் இப்போது ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it