வாஜ்பாயின் கையில் செங்கோல் சென்றிருந்தால் நான் ஏற்றிருப்பேன் – நெறியாளரை அலறவிட்ட திருமா!

வாஜ்பாயின் கையில் செங்கோல் சென்றிருந்தால் நான் ஏற்றிருப்பேன் – நெறியாளரை அலறவிட்ட திருமா!

Share it if you like it

செங்கோல் பா.ஜ.க.வின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கையில் சென்றிருந்தால் நான் ஏற்றிருப்பேன் என வி.சி.க. தலைவர் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது பேச்சு உண்மைக்கு மாறாகவும், வாய்க்கு வந்தபடி உளறி கொட்டும் வகையில் இருக்கும். எந்தவித புரிதலும் இல்லாமல் பேசக் கூடியவர் திருமாவளவன் என்பது அனைவரின் கருத்து. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக, அவரது பேட்டிகள் இருந்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல ஊடகமான தந்த டிவி வி.சி.க. தலைவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தது. இந்த, நேர்காணலை நெறியாளர் அசோக நடத்தியிருந்தார். அப்போது, ஜி.எஸ்.டி. குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை திருமாவளவன் அளித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தி டிவிக்கு திருமாவளன் மீண்டும் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில், புதிய நாடாளுமன்றத்தில் நிறுவிய செங்கோல் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் கையில் சென்றிருந்தால் நான் ஏற்று இருப்பேன் என கூறியிருக்கிறார். திருமாவின், இந்த பதிலை கேட்டு நெறியாளர் சிரித்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it