பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளி!

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளி!

Share it if you like it

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. இவரது, மறைவிற்கு பின்பு அக்கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஓ.பி.எஸ். அணி மற்றும் இ.பி.எஸ். அணி என இரண்டு அணியாக அ.தி.மு.க. பிரிந்துள்ளது. இதன்காரணமாக, அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்தவர் டாக்டர். மைத்ரேயன். இவர், இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it