ஹிந்து சிறுமி லவ் ஜிகாத் : கொடூர கொலை செய்த இஸ்லாமிய இளைஞன் !

ஹிந்து சிறுமி லவ் ஜிகாத் : கொடூர கொலை செய்த இஸ்லாமிய இளைஞன் !

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில், ஃபரியத் என்ற இஸ்லாமிய இளைஞன், ஃபரித்பூரில் வசித்து வந்த 15 வயது இந்து சிறுமியை மதம் மாற்றி கற்பழித்து, ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சிறுமியின் உடல் இரண்டு பல துண்டுகளாக சிதறி கிடந்தது. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞன் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்விற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். புகார்தாரர் மீது கொலை, கற்பழிப்பு, போக்சோ, கட்டாய மத மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எஃப்ஐஆர் நகல் ஓபிண்டியாவிடம் உள்ளது. இதுகுறித்து பரேலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் இறுதிச் சடங்குகளை அவரது குடும்பத்தினர் செய்துள்ளனர்.

தொடரும் முஸ்லிம்களின் லவ் ஜிஹாத் கொலைகள்!
அச்சத்தில் அலறும் அப்பாவி பெண்கள்!!

அப்பாவி பெண்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற காதலை கருவியாக பயன்படுத்திடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பலியாகும் பெண்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

உத்திரப்பிரதேசத்தில் இந்து பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி முஸ்லீமாக மதமாற வற்புறுத்திய போது மதம் மாற மறுத்ததால் இளம்பெண்ணை ரயிலில் தள்ளி இரு துண்டாக்கிய கொடூரம். ஜிஹாதி கொலையாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் உத்தரப்பிரதேசத்திலேயே அடங்காத லவ் ஜிஹாதி பயங்கரவாத முஸ்லிம்கள் தமிழகம் போன்ற சிறுபான்மை தாஜா அரசியல் செய்யும் மாநிலங்களில் என்ன ஆட்டம் ஆடுவார்கள் என பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர்.

காதலை கருவியாக பயன்படுத்தி மதம் மாற்ற முயற்சிக்கும் அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் இருந்து நம் வீட்டுப்பெண்களை பாதுகாக்க அரசை நம்பியிருப்பதில் பலனில்லை என்பதை உணர்ந்து சிறு வயதிலேயே ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக் கொடுப்பதுபோல் ‘குட் பீப்புள், பேட் பீப்புள்’ என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இன்று உத்திரபிரதேச அப்பாவி பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் நாளை நம் வீட்டுப் பெண்ணுக்கும் நடக்கலாம். மணிப்பூர் கிறிஸ்தவ பெண்களுக்கு பொங்கும் கனிமொழி வகையறாக்கள் இந்து பெண்கள் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *