பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்!

Share it if you like it

கர்நாடகாவில் எதிர்வரும் மே -10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், அக்கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் இதோ ;

மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வருடத்திற்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த சிலிண்டர்கள், உகாதி, விநாயர்கர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின் மாதங்களில் வழங்கப்படும்.

‘அடல் ஆஹார் கேந்திரா’ – இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஒரு கேண்டின் அமைத்து மலிவு விலையில் சத்தான உணவு வழங்கப்படும்.

‘போஷ்னே திட்டம் மூலம் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரசி மற்றும் 5 கிலோ சிறுதானியம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

‘சர்வார்கு சுரு யோஜனா’ – திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நவீனப்படுத்தப்படும்.

யுபிஎஸ்சி, வங்கித் தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயாரகும் நபர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் பெங்களூரு நகரம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.


Share it if you like it