மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி!

மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி!

Share it if you like it

சாவர்க்கர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் குற்றவாளியானார் ராகுல் காந்தி. இதனால், அவரது எம்.பி. பதவி பறிபோனது. இந்த சூழலில், மோடி சமூகம் பற்றி பேசியதற்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராகுலோ, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. ஆகவே, மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராகுல் தொடர்ந்து சாவர்க்கரை இழிவுபடுத்தி வருகிறார். இதேபோல தொடர்ந்து அவர் பேசினால் பொதுவெளியில் அவர் நடமாட சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், சாவர்க்கரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


Share it if you like it