யார் அந்த கறுப்பு ஆடு துரைமுருகன் ஆவேசம்…!

யார் அந்த கறுப்பு ஆடு துரைமுருகன் ஆவேசம்…!

Share it if you like it

தி.மு.க கூட்டணி தற்பொழுது உச்ச கட்ட குழப்பதில் இருக்கிறது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்… தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சி  ஒன்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியது..

அதனை தொடர்ந்து வைகோ, திருமா போன்றவர்கள் பகீர் கிளப்பி இருந்த நிலையில்… தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்மையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்…

சில கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு மறந்துபோய் இருக்கிறது.. 60 -70 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக இருக்கிறது.. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் வேதனை…


Share it if you like it