1 காதலன்… 2 காதலிகள்… நடுரோட்டில் குடுமிப்பிடி… 90ஸ் கிட்ஸ் ஏக்கம்!

1 காதலன்… 2 காதலிகள்… நடுரோட்டில் குடுமிப்பிடி… 90ஸ் கிட்ஸ் ஏக்கம்!

Share it if you like it

ஒரு காதலனுக்காக இரு இளம் பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய மாணவர்கள் சமுதாயம் எதனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் பதை பதைக்க வைக்கிறது. கடந்த, 20 வருடங்களுக்கு முன்பு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டி, ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்தார்கள். ஆனால், இன்று ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும், சம்பவங்களே தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, ஓடும் ரயிலில் சாகசம் செய்வது, கத்தியை வைத்துக் கொண்டு பொது மக்களை மிரட்டுவது, நடு ரோட்டில் ரவுடிகளைப் போல சண்டைப் போட்டுக் கொள்வது போன்ற காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

மாணவர்களின் செயல்பாடுகள் தான் இப்படி என்றால், மாணவிகளின் நிலை அதை விட மோசம் என்பதே நிதர்சனம். அந்த வகையில், சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த இரு மாணவிகள், என் ஆளுக்கிட்ட எப்புடி டீ நீ பேசலாம்? என்று பேசிய படியே, மற்றொரு மாணவியின் தலை முடியை பிடித்து, சண்டை போட்டுக் கொண்டனர். இந்த காணொளியை நியூஸ் 18 செய்தி சேனல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. அதன் லிங்க் இதோ.

இதனை தொடர்ந்து, உத்தர காண்ட் மாநிலம் ஹீரா நகர் பகுதியில் அமைந்து இருக்கிறது யோகா பூங்கா. அப்பகுதியின், மிக பிரபலமான பூங்காவாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் 13.7.2022 இங்கு ஏராளமான காதலர்களும், பொது மக்களும் குவிந்து இருக்கின்றனர்.

அப்பொழுது. இரு இளம் பெண்கள் ஒரு இளைஞருக்காக நடுத்தெருவில் நின்றுக் கொண்டு மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு உள்ளனர். இதனை, பார்த்த யாரோ ஒரு அப்பாவி 90ஸ் கிட்ஸ் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதையடுத்து, இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it