ராகுல்தான் பூஜ்ஜியம்! போட்டுத்தாக்கும் மத்திய அமைச்சர்

ராகுல்தான் பூஜ்ஜியம்! போட்டுத்தாக்கும் மத்திய அமைச்சர்

Share it if you like it

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கணக்கே தெரியாது. அவர் எதைக் கூட்டினாலும் விடை பூஜ்ஜியமாகத்தான் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம் செய்திருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை பா.ஜ.க.வினரும், நெட்டிசன்களும் பப்பு என்று கிண்டல் செய்து அழைப்பதுதான் வழக்கம். காரணம், அவரது செயல்பாடுகளும் சரி, நடவடிக்கைகளும் சரி, அந்தளவுக்கு குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். நாடாளுபமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில் பிரதமர் மோடியைப் பார்த்து ராகுல் கண்ணடித்து பேசியது பயங்கர கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மத்திய அரசை விமர்சித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளும், வேடிக்கையாகவே இருக்கும். இதை பா.ஜ.க.வினர் கேலி, கிண்டல் செய்வது வழக்கம்.

அந்த வகையில், மத்திய பட்ஜெட் குறித்து பிப்ரவரி 1-ம் தேதி (நேற்று) தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் காமெடியாக பதிலடி கொடுத்திருப்பதுதான் ஹைலைட். அதாவது, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 2022 – 23-ம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில விநாடிகளிலேயே ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார் காங்கிரஸ் குடும்ப அரசியல் தலைவர் ராகுல் காந்தி. அதில், இந்த பட்ஜெட் பூஜ்யம் என்று சாடியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பட்ஜெட்டின் நோக்கத்தை புரிந்துகொண்ட அனைவரும் இதை வரவேற்றிருக்கிறார்கள். இந்த புதிய பட்ஜெட் மக்களுக்கு புதிய வழியை காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் போக்கு எதிர்மறையான மனப்போக்கைக் கொண்டது. குறை காண்பதை மட்டுமே தங்களது குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், ராகுல் காந்திக்கு கணக்கே தெரியாது. அதனால், அவர் எதைக் கூட்டினாலும், பூஜ்ஜியமாகத்தான் வரும் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.


Share it if you like it