மக்களிடையே தேசபக்தியை தூண்டியவர் கேப்டன் விஜயகாந்த் –  அமித்ஷா !

மக்களிடையே தேசபக்தியை தூண்டியவர் கேப்டன் விஜயகாந்த் – அமித்ஷா !

Share it if you like it

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தனது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கலை தமிழில் குறிப்பிட்டுள்ளார். அதில், தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி.


Share it if you like it