தர்காவில் வேலூர் இப்ராகிமை தாக்க முயன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் !

தர்காவில் வேலூர் இப்ராகிமை தாக்க முயன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் !

Share it if you like it

நாகூர் தர்கா தமிழ் நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ளது. இது, முஸ்லீம் மக்களின் இந்தியாவிலேயே மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது. நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் கலந்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் சையது இப்ராகிம் என்கிற வேலூர் இப்ராகிம் சென்றுள்ளார். அந்த விழாவில் கலந்துக்கொண்டு பிரார்த்தனை முடிந்து வெளிவரும் சமயத்தில் #SDPI #TMMK உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் அவரை சூழ்ந்து தாக்க முயற்சித்து உள்ளனர். மேலும் நாகூசும் வகையில் மிக இழிவாக தகாத வார்த்தைகளால் வசை பாடி இங்கிருந்து வெளியே போ என்று மிரட்டியுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று அனுப்பி வைத்தார். தொடரும் மதவாத வன்முறை போக்கை முதல்வர் ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் வேலூர் இப்ராகிம்.இதுதொடர்பான காணொளி ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/syedibrahimbabl/status/1740247281977446583?s=20


Share it if you like it