தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டது. இந்த நிலையில் வழக்கை வரும் 6- தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் அது வரை தற்போதைய உத்தரவே தொடரும் என்றும உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.