பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார்!

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார்!

Share it if you like it

பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்கிறது என அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என தி.மு.க.வின் அடிமை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. மேலும், அதனை ஊதி பெரிதாக்கும் முயற்சியில் சில கூலிபான்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து, இரு கட்சியை சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார் : அ.தி.மு.க. பா.ஜ.க. இடையில் எந்த மோதல் போக்கும் இல்லை. எங்கள் கூட்டணி தொடர்கிறது என கூறியுள்ளார்.

இதன்மூலம், அரசியல் ஆதாயம் தேட முயன்றவர்களுக்கு சரியான நோஸ்கட் கிடைத்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.


Share it if you like it