மத்திய அரசின் அதிரடி  – 212 இந்தியர்கள் தாயகம் ! இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங் !

மத்திய அரசின் அதிரடி – 212 இந்தியர்கள் தாயகம் ! இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங் !

Share it if you like it

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் ஆண்கள்,பெண்கள் முதியவர்கள்,குழந்தைகள் என பல பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேலும் ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலுக்கு “ஆபரேஷன் அயன் சுவார்ட்ஸ்” மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.

இதுவரை இஸ்ரேல் பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து,அமெரிக்கா,இந்தியா என பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா தனது போர்க்கப்பலை இஸ்ரேலின் எல்லை பகுதிக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து கூறியுள்ளார். இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் அஜய்” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது.

இந்நிலையில் இதன்படி நேற்று, இந்தியாவில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட சிறப்பு விமானம், டெல் அவிவ் நகரில் தரையிறங்கியது. அங்கிருந்து 212 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட விமானம், இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தது. ஆபத்திலிருந்து மீண்டு தாயகம் திரும்பிய மகிழ்ச்சியை அவர்களின் முகத்தில் காண முடிகிறது என்பதை சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் வழியாக காணலாம்..


Share it if you like it