புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல்-மந்திரி ரங்கசாமி உட்பட 4 மந்திரிகள் உள்ளனர். அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்தவர் சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார்.
இந்நிலையில் திடிரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனது பதவியானது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களில் ஒருவருக்கு இந்த பதவியை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குவதனால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
இவர் ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை ஆகியவற்றையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.