நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் -3 விண்கலத்தை நாளை மாலை 6.04 மணிக்கு தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது லேண்ட் நிலலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே விக்ரம் லேண்டரை கண்காணிக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.