மணிப்பூரை விஞ்சிய சென்னை சம்பவம்… பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் மீட்பு!

மணிப்பூரை விஞ்சிய சென்னை சம்பவம்… பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் மீட்பு!

Share it if you like it

மணிப்பூரை விஞ்சும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தி இருக்கிறது.

சென்னை ஆலந்தூர் அருகே உள்ளாகரத்தைச் சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ம் தேதி காலையில் பள்ளிக்குச் செல்வதாக கூறி சைக்கிளில் சென்ற மாணவி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், காணாமல் போன மாணவியின் உடல் கடந்த 20-ம் தேதி நங்கநல்லூர் பர்மா காலனியில் உள்ள தலைக்கனஞ்சேரி கல்குவாரி குட்டையில் மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசினார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.


Share it if you like it