தமிழகத்தில் ஹிந்துக்களின் பண்டிக்கைகளுக்கு வாழ்த்து கூறாத தலைவர்களில் ஒருவராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று வரை இருந்து வருகிறார். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஹிந்துக்கள் தங்கள் உரிமையை கூட போராடி பெறும் அவலநிலையே விடியல் ஆட்சியில் உள்ளது என்பது கசப்பான உண்மை. வாரத்தில் 7 நாட்களும் கோவில் திறக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடத்திய போராட்டத்திற்கு பின்பு தான் தமிழக அரசு பணிந்தது. இந்நிலையில் மெட்ரோ திட்டத்திற்காக 1.36 லட்சம் சதுர மீட்டர் இடத்தை 4 கோவில்களில் இருந்து தி.மு.க அரசு கையகப்படுத்த உள்ளதாக பத்திரிக்கையில் வந்த செய்தியை இந்து முன்னனி சென்னை நகர தலைவர் இளங்கோ அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.