‘மோடி சொன்னா கேட்பீங்க… நாங்க சொன்னா கேட்க மாட்டீங்களா?’ திமிராக பேசிய டி.டி.: தட்டிக்கேட்ட பயணி!

‘மோடி சொன்னா கேட்பீங்க… நாங்க சொன்னா கேட்க மாட்டீங்களா?’ திமிராக பேசிய டி.டி.: தட்டிக்கேட்ட பயணி!

Share it if you like it

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணியிடம் மோடி சொன்னா கேட்பீங்க, நாங்க சொன்னா கேட்க மாட்டீங்களா என்று வாய்த்துடுக்காக பேசிய டி.டி.ஆரை பயணி ஒருவர் தட்டிக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையிலிருந்து நேற்று மாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அடையாள அட்டைகளை கேட்டு வாங்கி சரிபார்த்துக் கொண்டே வந்தார். இந்த சூழலில், ஒரு பயணியிடம் அடையாள அட்டை கேட்டதற்கு, அவர் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த அடையாள அட்டையை காட்டி இருக்கிறார். உடனே, ஒரிஜினல் அடையாள அட்டைதான் வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர் கறார் காட்டி இருக்கிறார்.

மேலும், மோடி சொல்றதை எல்லாம் கேட்குறீங்க. நாங்க சொல்றதை கேட்க மாட்டீங்களா? ஒரிஜினல் அடையாள அட்டை காட்டணும்னு மோடிதானே சொல்லி இருக்கிறார் என்று தேவையில்லாமல் பாரத பிரதமர் மோடியை பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு ரயில் பயணி, எப்படி பாரத பிரதமரைப் பற்றி தவறாகப் பேசலாம் என்று டிக்கெட் பரிசோதகரிடம் தட்டிக் கேட்கிறார். இதையடுத்து, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நடந்த காரசார வாக்குவாதத்தை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ பாருங்கள்…


Share it if you like it