அற்புதத்தை நிகழ்த்திய பாஸ்டர் ஜியோஃரி… இன்னுமாய்யா இந்த உலகம் உங்கள நம்புது!

அற்புதத்தை நிகழ்த்திய பாஸ்டர் ஜியோஃரி… இன்னுமாய்யா இந்த உலகம் உங்கள நம்புது!

Share it if you like it

நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பது, பேச முடியாதவர்களை பேச வைப்பது போன்ற நாடகத்தை கிறிஸ்தவ மதபோதகர்கள் நிறுத்துவதாக இல்லை என்பது மற்றொரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

கிறிஸ்தவ மதபோதகர்கள் பலரும் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறிக்கொள்வார்கள். குறிப்பாக, இயேசு அழைக்கிறார் சபையின் நிறுவனர் பால்தினகரனில் தொடங்கி, இயேசு விடுவிக்கிறார் சபையின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் வரை பலரும் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றுபவர்கள்தான். சி.டி.யை வைத்து கேன்சர் வியாதியை குணப்படுத்துவது முதல், பில்லி, சூன்யத்தை எடுப்பது, பிசாசுகளை விரட்டுவது, முடவனை நடக்க வைப்பது, ஊமையை பேச வைப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தை இல்லாத பெண்ணுக்கு ஸ்ஸ்ஸ்… என்று கைகளை நீட்டி கர்ப்பிணியாக்குவது என ஜெகஜால வித்தைகளை அரங்கேற்றுவார்கள்.

அந்த வகையில், பில்லி, சூனியத்தை எடுப்பது, பிசாசுகளை விரட்டுவதில் எக்ஸ்பர்ட்தான் வானத்தின் வாசல் சபையை நடத்தி வரும் ஜியோஃரி மினிஸ்டிரிஸ். சென்னையில் ஏராளமான இடங்களில் இவரது சபையின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெஷல் எடிசன் என்னவென்றால் ஞாயிறுதோறும் நடக்கி சிறப்பு ஹீலிங் பிரார்த்தனைதான். இதில்தான், சகலவிதமான அதிசயம் மற்றும் அற்புதங்களும் நிகழும். இதில் ஹைலைட் என்னவென்றால் ஆன்லைனில் கூட அற்புதங்களை நிகழ்த்துவார் என்பதுதான். மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற பெயரிலும் தமிழில் நிலைமறந்தவன் என்ற பெயரிலும் வெளியான படத்தில் என்னென்ன காட்சிகள் எல்லாம் இடம்பெற்றதோ, அவை அத்தனை காட்சிகளையும் இந்த ஜியோஃரி மினிஸ்டிரிஸின் வானத்தின் வாசல் சபையில் காணலாம்.

இந்த நிலையில்தான், 35 நாட்களாக நடக்க முடியாமல் இருந்த சிறுமியை நடக்க வைத்து அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறார் ஜியோஃரி. அதாவது, ஒரு பெண் தனது 10 வயது மதிக்கத்தக்க மகளை இவரது வானத்தின் வாசல் சபைக்கு அழைத்து வருகிறார். (நிலைமறந்தவன் படத்தில் இடம்பெற்றது போல எல்லாம் ஏற்கெனவே செட் அப் செய்யப்பட்டதுதான்). அப்பெண் அந்த சிறுமியை உப்பு மூட்டை தூக்குவதுபோல முதுகில் சுமந்து வருகிறார். அப்போது, சபையில் இருக்கும் ஜியோஃரி, எதுவுமே தெரியாததுபோல குழந்தைக்கு என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு அப்பெண் கடந்த 35 நாட்களாக தனது மகளால் நடக்க முடியவில்லை என்றும், எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பலனளிக்கவில்லை என்றும், தனது அண்ணன்தான் பாஸ்டர் ஜியோஃரியின் சபைக்கு செல்லுமாறு கூறியதாகவும் சொல்கிறார்.

இதன் பிறகுதான் அங்கு அற்புதங்கள் நிகழ்கிறது. அச்சிறுமியின் தலையில் பாஸ்டர் ஜியோஃரி கையை வைத்ததும் அச்சிறுமி அப்படியே மல்லாக்க விழுகிறார். சிறிது நேரத்தில் அச்சிறுமியை எழுப்பிய ஜியோஃரி, ஜெபித்தவாறே அச்சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார். பிறகு, கையை விட்டுவிட்டு நீயாக நடந்து வா என்கிறார். அச்சிறுமியும் நடந்து வருகிறார். அவ்வளவுதான் அற்புதத்தை நிகழ்த்தி விட்டார் பாஸ்டர் ஜியோஃரி. இதன் பிறகு, அச்சிறுமியின் தாயிடம், என்ன நடந்தது பார்த்தாயா என்று பில்டப் கொடுத்துவிட்டு, உனது வீட்டில் பில்லி, சூனியம் வைத்திருக்கிறார்கள். ஆகவே, பிரேயர் செய்ய வேண்டும் என்று கூறியபடியே, அங்கு கூடியிருந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறார். அப்புறமென்ன, பிரேயர் மூலம் பில்லி, சூனியம் எடுக்கப்பட்டு விட்டது.

இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பாஸ்டர் ஜியோஃரி. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இன்னுமாய்யா இந்த உலகம் உங்கள மாதிரி ஆட்களை எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, கடவுள் மீது நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். அதற்காக, இப்படி மூட நம்பிக்கை இருக்கக் கூடாது. இதுபோன்ற பாஸ்டர்களால் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்றால், எதற்காக நாட்டில் இத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத மக்களை என்ன செய்வது என்று நொந்து கொள்கின்றனர். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோலவும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதுபோலவும், இதுபோன்ற பாஸ்டர்கள் தங்களது தில்லாலங்கடி தனத்தை நிறுத்தாதவரை, மக்கள் நம்பிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.


Share it if you like it