பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் ரூ. 10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய பொய் என்றும், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் தயாரா? என்றும் தெரிவித்துள்ளார். திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும் தான் என்றும் அதில் முதலமைச்சர் ஸ்டாலின் எந்த அளவிற்கு எந்த எல்லைக்கும் செல்வார் என இதன் மூலம் தெரிகிறது எனறும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.