தலைமை நீதிபதியை அணுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்!

தலைமை நீதிபதியை அணுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்!

Share it if you like it

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க மறுத்த சென்னை மாவட்ட முதன்மை செஸன்ஸ் நீதிமன்ற நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் ஜாமின் மனுவை விசாரிப்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தை உயர்நீதிமன்றத்திடமிருந்து பெற்று வரும்படி செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சக்திவேல், சுந்தர் அமர்வு முன்னிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தினர்.


Share it if you like it