பாதிரியாருக்கே இந்த நிலைமையா!

பாதிரியாருக்கே இந்த நிலைமையா!

Share it if you like it

பெந்தகோஸ்தே அமைப்பை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் உடலை புதைக்க சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் வயது-75. இவர், அதே பகுதியில் பெந்தகோஸ்தே சபையின் பாஸ்டராக இருந்தவர். நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக திடீர் என மரணம் அடைந்து இருக்கிறார். இதையடுத்து, அவரின் உடலை தொங்குட்டிபாளையம் பெருந்தொழுவு கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு, பெருந்தொழுவு சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல பத்திரிக்கையான தினமலர் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதே போன்றதொரு சம்பவம், சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும் அரங்கேறி இருந்தது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் – ஜெனிஃபர் தம்பதியின் மகன் தீக்ஷித். 7 வயதான இச்சிறுவன், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். மறதியின் காரணமாக தனது பையை பள்ளி வேனிலேயே வைத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். அதன் பின்னர், பையை எடுப்பதற்காக வேனை நோக்கி ஓடி வந்திருக்கிறான். அப்போது, எதிர்பாராத விதமாக பின் நோக்கி வந்த பள்ளி வேன் அவன் மீது மோதியுள்ளது. இதில், தீக்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

நாங்க ஆர்.சி., நீங்க சி.எஸ்.ஐ.! கல்லறைக்கு கச்சைகட்டிய சர்ச்?

இதையடுத்து, சிறுவன் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ கல்லறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். நீங்கள் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள். நாங்கள் ஆர்.சி. கிறிஸ்தவர்கள். ஆகவே, ஆர்.சி. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான கல்லறையில், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது என உறுதியாக தெரிவித்து விட்டனர். இதையடுத்து, சிறுவனின் தாயார் ஜெனிஃபர் ஊடகங்கள் முன்பு கதறி அழுத காட்சி தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல, கடந்தாண்டு தனது தாயார் இறந்தபோது சர்ச்சுக்குச் சென்று பாதிரியார்களிடம், தனது வீட்டில் வந்து ஐபம் செய்யும்படி கேட்டபொழுது. அதற்கு சர்ச் நிர்வாகம் இதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டதாக னிஃபர் கூறியது தான் கொடுமையிலும் கொடுமை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, ஆர்.சி., சி.எஸ்.ஐ., புரோட்டஸ்டாண்ட், அல்லேலூயா என ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குமே தனித்தனியாக சர்ச்சுகளும், கல்லறைகள் இருக்கின்றனர். ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருடனும் சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதேபோல, எல்லா விஷயங்களிலுமே ஒவ்வொரு பிரிவினரும் மாறுபட்டு இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி பாகுபாடு உள்ளது என இங்குள்ள வீரமணி, திருமா, வைகோ மற்றும் பல உதிரி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், கிறிஸ்தவ மதத்தில் ஜாதி தீண்டாமைகள், ஜாதி பாகுபாடுகள் என புரையோடி போய் இருக்கும் இது போன்ற சம்பவங்கள் குறித்து நமது போராளிகள் எப்பொழுது வாய் திறப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it