பாவ மன்னிப்பு கொடுக்கும் பாதிரியார்…போக்சோவில் உள்ளே சென்ற சோகம்!

பாவ மன்னிப்பு கொடுக்கும் பாதிரியார்…போக்சோவில் உள்ளே சென்ற சோகம்!

Share it if you like it

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மதபோதகர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு, ஊழியம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு செயல்படுபவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள். ஒருவருக்கு சிறு வயதில் ஞானஸ்தானம் கொடுப்பது முதல் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது வரை அனைத்துமே பாதிரியார்கள்தான். இதனால், கிறிஸ்தவர்கள் மத்தியில் பாதிரியார்களுக்கு பெரும் செல்வாக்கு உண்டு.

அந்தவகையில், இவர்கள் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதி செயல்படுவது கிறிஸ்தவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனாலும், பாதிரியார் என்ற பெயரில் சில்மிஷம் செய்யும் நபர்களும் இன்று வரை இருந்துதான் வருகின்றனர். தூய ஆவியிடம் வேண்டி கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய பாதிரியார்கள் சில நேரங்களில் தீய ஆவியிடம் மாட்டி கொண்டு கம்பி எண்ணும் சம்பவங்களும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டீபன் ராஜ் என்பவர் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it