பட்டியல் இன மக்களை பாடாய் படுத்திய பாதிரியார்! கொத்து கொத்தாக தாய் மதம் திரும்பும் மக்கள்?

பட்டியல் இன மக்களை பாடாய் படுத்திய பாதிரியார்! கொத்து கொத்தாக தாய் மதம் திரும்பும் மக்கள்?

Share it if you like it

ஜாதி தீண்டாமையை கடைபிடிக்கும் பேராயருக்கு எதிராக கொதித்தெழுந்த பட்டியல் சமூக மக்கள். மீண்டும் தாய் மதம் திரும்ப போவதாக எச்சரிக்கை.

ஹிந்து மதத்தை விட்டு பட்டியல் சமூக மக்கள் வெளியேற வேண்டும். இந்த மதத்தில் மட்டுமே ஜாதி பார்க்கப்படுகிறது என திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதே போல, திராவிடர் கழகமும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும், அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றன. இவர்களின், நச்சு கருத்துக்களை ஹிந்துக்கள் புறம் தள்ளிவிட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் இன்று வரை இணக்கமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஹிந்து மதத்தை மட்டுமே குறிவைத்து தாக்கி பேசி வரும் இவர்கள், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் உள்ள தவறுகள் மற்றும் தீண்டாமைகள் குறித்து பேசுவதில்லை. வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக பெரும்பான்மை மக்களின் உண்ரவுகளை இன்று வரை காயப்படுத்தி வருகின்றனர் போலி அரசியல்வாதிகள். அந்த வகையில், கொரோனா தொற்று தமிழக மக்களுக்கு கொடுத்த பாடத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இக்கட்டான அந்த சமயத்தில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி போன்றவை ஜாதி, மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பல உதவிகளை செய்தன. ஆனால், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான மதபோதகர் மோகன் சி லாசரஸ், தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன் என்று கிறிஸ்தவ மக்களின் மனம் புண்படும் படி பேசியிருந்தார். மேலும், தம்மை பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கும் அவர் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று பலர் புலம்பி இருந்தனர்.

எஸ்றா சற்குணம், மோகன் சி லாசரஸ் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் எங்கள் மதத்தில் ஜாதி பாகுபாடு, தீண்டாமை இல்லை என்று ஊர் முழுக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறை உள்ளிட்டவற்றை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் ஆணவ பேச்சிற்கு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பது இல்லை என்பதே நிதர்சனம்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ளது வாகைக் குளம். இப்பகுதியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நெல்லை, தென்காசி என இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து திருமண்டல பேராயராக அண்மையில் பர்னபாஸ் நியமிக்கப்பட்டார். இவர், பதவியேற்ற நாளில் இருந்தே, பட்டியல் சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்களிடம் தீண்டாமையை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் ஜாதி பாகுபாட்டை பேராயர் கடைபிடிப்பதாக பட்டியல் இனத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்செய்தியினை நியூஸ் தமிழ் 24/7 வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் லிங்க் இதோ.

.


Share it if you like it