ஹிந்து மதம், மத்திய அரசுக்கு, எதிராக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் கிறிஸ்தவ பாதிரியார்கள்..!

ஹிந்து மதம், மத்திய அரசுக்கு, எதிராக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் கிறிஸ்தவ பாதிரியார்கள்..!

Share it if you like it

மத்திய அரசு மற்றும் ஹிந்து ஆலயங்களுக்கு எதிராக தேவாலயங்களில் தொடரும் வெறுப்பு பிரச்சாரம்.

மூன்று வருடமாக மண்டியிட்டு ஜெபம் செய்து வருகிறேன் நிச்சயம் பிரதமராக மோடி வரமாட்டார். அப்படி அவர் மீண்டும் பிரதமர் ஆனால் நான் ஏசுவை வணங்குவதை நிறுத்தி விடுகிறேன் என்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் அவர்கள் தெரிவித்த கருத்தினை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் பொன்னையா என்பவர் பாரதப் பிரதமர் மோடி குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும், அருவக்கதக்க வகையிலும் சமீபத்தில் பேசி இருந்தார்.

மோகன் சி லாசரஸ், எஸ்றா சற்குணம், ஜெகத் கஸ்பர், பொன்னயா போன்று மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக தனது வெறுப்பு பிரச்சாரத்தை சர்ச்சில் மேற்கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹிந்து மதத்திற்கு எதிராகவும், தேசத்திற்கு எதிராகவும், தொடர்ந்து வெறுப்பு உணர்வை தூண்டி வரும் கிறிஸ்தவ பாதிரியார்களின் செயலை எப்பொழுது நடுநிலை ஹிந்துக்கள் கண்டிப்பார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it