படத்தில் மத பிரச்சாரம்?: பிரபு சாலமனிடம் வாக்குவாதம் செய்த பத்திரிகையாளர்கள்!

படத்தில் மத பிரச்சாரம்?: பிரபு சாலமனிடம் வாக்குவாதம் செய்த பத்திரிகையாளர்கள்!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் பிரபு சாலமனிடம் பத்திரிகையாளர்கள் வாக்கு வாதம் செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.

மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் பிரபு சாலமன். இதனை தொடர்ந்து, அவர் இயக்கிய கயல், தொடரி மற்றும் காடன் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இதையடுத்து, அவர் இயக்கியுள்ள திரைப்படம்தான் ’செம்பி’. இந்த திரைப்படம், டிச.,30 -ஆம் தேதி (இன்று) வெளியாக உள்ளது.

இப்படத்தில், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அந்த வகையில், இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, இப்படம் குறித்த பிரத்யேக காட்சியை பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியாவிற்கு இயக்குனர் பிரபு சாலமன் போட்டு காண்பித்துள்ளார்.

படத்தின் முடிவில், ”உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து என்று ”இயேசு” கூறியதாக அடங்கிய வாசகத்துடன் அப்படத்தை இயக்குநர் முடித்துள்ளார். படத்தை பார்த்த சில பத்திரிகையாளர்கள் உலகில் கிறிஸ்தவம் மட்டுமே அன்பை போதிப்பது போல முடித்தது ஏன்? என்று கேள்வியை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, இயக்குனருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மத்தியில் வார்த்தை போர் ஏற்பட்டன. இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it