கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வை ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் –  பத்திரிகையாளர் மணி கதறல்!

கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வை ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் – பத்திரிகையாளர் மணி கதறல்!

Share it if you like it

கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு வருவதாக மூத்த பத்திரிக்கையாளர் மணி கதறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும் தமிழக மக்கள் நன்கு அறிந்தவருமாக இருப்பவர் பத்திரிக்கையாளர் மணி. இவர், பேசும் பெரும்பாலான கருத்துக்கள் பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராகவே மட்டும் இருக்கும். இதுதவிர, பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சியை கண்டு தி.மு.க.விற்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை உஷார் செய்வதே இவரது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டியது என்பது அண்ணாமலை வந்த பிறகு கஷ்டமானதாக மாறிவிட்டது இதுதான் உண்மை.

அவர் புது புதுசா செய்கிறார். அதனால், தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன் அரசியலில் அவர் ஆபத்தான மனிதர். அதற்கு, முன்னாள் இருந்த பா.ஜ.க தலைவர்களோடு நான் பழகி இருக்கிறேன். இல.கணேசனை பார்த்து இருக்கிறேன், பொன்னாரை பார்த்து இருக்கிறேன், சி.பி.ராதாகிருஷ்ணன் பார்த்து இருக்கிறேன், தமிழிசை செளந்தரராஜனை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் இல்லாத ஒன்று கட்சியை வளர்க்க எந்த எல்லைக்கும் செல்லும் சக்தி மிக்க மனிதராக அண்ணாமலை இருக்கிறார். வருங்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே அண்ணாமலையை எதிர் கொள்ள முடியும் என கதறிய காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.

அந்தவகையில், பேரலை இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; கேரள மாநிலத்தில் பா.ஜ.கவிற்கு எம்பி.க்களோ, எம்.எல்.ஏக்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், கேரள மாநில மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக, கேரள கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.விற்கு ஓட்டு போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை, ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர் என மூத்த பத்திரிக்கையாளர் மணி மீண்டும் ஒருமுறை கதறிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

அதன் லிங்க் இதோ.  


Share it if you like it