டி.ஐ.ஜி. தற்கொலை: அண்ணாமலை அதிரடி கேள்வி!

டி.ஐ.ஜி. தற்கொலை: அண்ணாமலை அதிரடி கேள்வி!

Share it if you like it

கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?

காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று தமிழக அரசு தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக பா.ஜ.க. சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it