நாங்கு நேரி, கயத்தாறு நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வசூல் செய்வதை மட்டுமே இலக்காகக் கொண்டு சுங்கச்சாவடிகள் செயல்படக்கூடாது என தெரிவித்ததுடன், இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை பதிலளிக்க உத்தரவிட்டது.