போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் சாவு..!

போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் சாவு..!

Share it if you like it

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மான முறையில்  மரணம்.

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து கொண்டு இருப்பவர் 21 வயது மாணவர் மணிகண்டன். காவல்துறை வாகன பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது தனது பைக்கை சில மீட்டர் தூரம் தள்ளி நிறுத்த முயன்ற பொழுது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணை என்னும் பெயரில் மாணவனை காவல் நிலையம் அழைத்து சென்று மாலையில் விடுவித்து உள்ளனர். ஆனால் அன்று இரவே மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்த சம்பவம் அவ்வூர் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் தந்தை, மகன், இருவரும் மர்மான முறையில் காவல் நிலயைத்தில் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் காவல்துறை கஸ்டடியில் உயிர் இழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெனிக்ஸ் குடும்பத்திற்கு உடனே கருத்து சொன்ன காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி, சுந்தரவள்ளி, தி.மு.க எம்பி கனிமொழி உட்பட யாரும் மணிகண்டன் மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முறையான விசாரணையை மேற்கொண்டு மாணவனுக்கு நீதி வழங்க வேண்டும் என பலர் தமிழக அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  உட்பட பலர் நீதி வேண்டும் என தங்களது கருத்தினை டுவிட்டரில் பதிவு செய்து  உள்ளனர்.


Share it if you like it