காமெடி நடிகர் சூரிக்கு பயில்வான் பதிலடி!

காமெடி நடிகர் சூரிக்கு பயில்வான் பதிலடி!

Share it if you like it

கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காமெடி நடிகர் சூரிக்கு, நடிகர் பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மதுரையில் நடந்த விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காமெடி நடிகர் பரோட்டா சூரி,  “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட, ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட ஒரு மாணவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் அண்ணன் சூர்யாவுக்கு நன்றிகள்” என்று கூறியிருந்தார். சூரியின் இப்பேச்சு ஹிந்துக்கள், ஹிந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சூரிக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்தான், காமெடி நடிகர் சூரிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கோயிலையும், கல்வியையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் நடிகர் சூரி. சரி, அவரது கூற்றுப்படியே வைத்துக் கொள்வோம், கோயில்களை பற்றிச் சொன்னவர், ஏன் சர்ச்களையும், மசூதிகளையும் ஒப்பிட்டு பேசவில்லை. அப்படியானால் ஹிந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? இது என்னய்யா அநியாயமா இருக்கு.

அதேபோல, அன்னச்சத்திரத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார். இதே சூரி, இந்த சாலிகிராமத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு கஷ்டப்பட்டதாக கூறியிருக்கிறார். ஆகவே, பசியின் அருமை என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும். மக்களின் பசியை போக்குவதற்குத்தான் ஜெயலிலதா கோயில்களில் அன்னதானம் போடும் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆனால், தற்போது நடிகர் சூரி, மதுரையில் 4 ஹோட்டல்களை திறந்திருக்கிறார். அதனால் அவர் பசியை பற்றி மறந்திருக்கலாம். நீயும் ஒரு ஹிந்துதானே, அப்படி இருக்க கோயிலைப் பற்றி ஏன் இப்படிப் பேச வேண்டும்.

தவிர, இன்றைக்கும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எந்தத் தியேட்டர் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதில்லை. அதேபோல, எந்தப் படம் எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பதில்லை. வருபவர்கள் அனைவரும் தஞ்சை பெரிய கோயில், மதுரை திருமலை நாயக்கர் மகால் என தமிழ்நாட்டிலுள்ள கோயில்களைத்தான் வியந்து பார்த்துச் செல்கிறார்கள். எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் எப்படி இப்படியொரு கலைநயத்துடன் இவர்களால் கோயில்களை கட்ட முடிந்தது என்று ஆச்சரியப்பட்டு போகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசின் முத்திரையில் என்ன இருக்கிறது தெரியுமா? ஹிந்துக்களின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில்தான்டா” என்று நடிகர் சூரியைப் போட்டு பொளந்து கட்டி இருக்கிறார். இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it