வெட்கமா இல்ல… நெறியாளரை வெளுத்து வாங்கிய -நாராயணன்!

வெட்கமா இல்ல… நெறியாளரை வெளுத்து வாங்கிய -நாராயணன்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் ஐபிசி ஊடக நெறியாளரை வெளுத்து வாங்கிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையை சேர்ந்த விடுதலை புலிகள் இயக்கம் நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில், 16 தமிழ் குடும்பங்கள் தங்களது உறவுகளை இழந்தன. இச்சம்பவத்தில், படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த (ஓய்வு) காவல்துறை உயர் அதிகாரி அனுசுயா மற்றும் தனது அன்னையை இழந்த அப்பாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இக்காணொளிகளை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும். இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் ஐபிசி ஊடக நெறியாளர் பேரறிவாளன் விடுதலை குறித்து எழுப்பிய கேள்விக்கு காட்டமான முறையில் பதில் அளித்த காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

அதன் லிங்க் இதோ…


Share it if you like it