பெண் IAS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்கிய காங்கிரஸ்..
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப். பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் புதிய முதல்வராக சரஞ்சித் சன்னி என்பவரை அக்கட்சி தற்பொழுது நியமனம் செய்து உள்ளது. புதிய முதல்வரின் நியமனம் பல்வேறு சமூக ஆர்வலர்கள், பெண்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண் IAS அதிகாரிக்கு ஆபாச SMS அனுப்பிய ஒருவரை பஞ்சாப் முதல்வர் ஆக்கியுள்ளது சோனியா காந்தி குடும்பம். இதை எதிர்த்து பல்வேறு மகளிர் அமைப்புகள் கொடிபிடிக்க துவங்கி விட்டன. ஆனார் இது குறித்து எல்லாம் கருத்து தெரிவிக்காமல் எங்கே? சென்றார் பெண் போராளி ஜோதிமணி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.