கட்சிக்கு ஆட்களை சேர்த்தால் மாநாடு டிக்கெட் ப்ரீ.. இளைஞர்களுக்கு வலை வீசும் காங்கிரஸ்..!

கட்சிக்கு ஆட்களை சேர்த்தால் மாநாடு டிக்கெட் ப்ரீ.. இளைஞர்களுக்கு வலை வீசும் காங்கிரஸ்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களை சேர்த்தால் மாநாடு டிக்கெட் இலவசம்.

சோனியா காந்தி தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் தனது செல்வாக்கை இழந்த நிலையில், மீண்டும் தனது கட்சிக்கு புத்தூயிர் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து அக்கட்சி மேற்கொண்டு வந்தாலும், மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிய, சமீபத்தில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட பொழுது, கட்சியில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும். 2′-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 4 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு தங்க நாயணங்கள் வழங்கப்படும்” என்று மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தெரிவித்த சம்பவம் அந்நாட்களில் பேசு பொருளாக மாறி இருந்தது.

அதனை தொடர்ந்து தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரையே ஓவர் டேக் செய்யும் விதமாக கோவை மாவட்டத்தில் மிகப் பெரிய கூத்து ஒன்று அரங்கேறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் ஆன்லைனில் மாவட்ட தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளருக்கான தேர்தல் நடைபெறுவதாகவும் அதற்கு வாக்கு அளிக்க முன்வரும் இளைஞர்களுக்கு மாநாடு டிக்கெட் இலவசம் என காங்கிரஸ் கட்சி ஆசை வார்த்தை கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளே இல்லாத கட்சிக்கு ஆட்களை சேர்க்க காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த மேலும் விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it