பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த கூடாது என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மத்திய அமைச்சர் மற்றும் புதுவை முன்னாள் மாநில முதல்வராக இருந்தவர் நாராயணசாமி. இவரிடம், பிரபல ஊடகமான தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் வாயிலாக பேட்டி கண்டது. அப்போது, நெறியாளர் ஹரி பொது சிவில் சட்டம் குறித்து நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மழுப்பலான பதிலை அளித்தார். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.