கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த காமெடி!

கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த காமெடி!

Share it if you like it

கர்நாடகாவில் எதிர்வரும் மே-10 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் செய்த காமெடி ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

எதிர்வரும் மே-10 தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பா.ஜ.க., காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அதன் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் இருந்த தலைவர்கள் மற்றவர்களின் கைகளை உயர்த்தி பிடித்து ஊடகத்திற்கு போஸ் கொடுக்க முயன்று இருக்கின்றனர். அப்போதுதான், இந்த கூத்து அரங்கேறி இருக்கிறது. அதாவது, சித்தராமையாவின் கையில் கட்டு உள்ளது என்பதை மறந்து விட்டு அவரது கட்டை கழற்ற முயன்ற சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it