காங்கிரஸ் ஆட்சி… விண்ணை பிளந்த பாகிஸ்தான் கோஷம்!

காங்கிரஸ் ஆட்சி… விண்ணை பிளந்த பாகிஸ்தான் கோஷம்!

Share it if you like it

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே-10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, நேற்றைய தினம் ( மே-13 ) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அம்மாநிலத்தில், இன்னும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கூட அமைக்கவில்லை. அதற்குள்ளாகவே, பாகிஸ்தான் வாழ்க எனும் கோஷம் கர்நாடகாவில் எழும்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it