கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே-10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, நேற்றைய தினம் ( மே-13 ) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அம்மாநிலத்தில், இன்னும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கூட அமைக்கவில்லை. அதற்குள்ளாகவே, பாகிஸ்தான் வாழ்க எனும் கோஷம் கர்நாடகாவில் எழும்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.